பழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா

வரும் மார்ச் – பிப்ரவரி மாதங்களில் இந்தியா – மியான்மர் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.


மியான்மருக்கு நீர்மூழ்கிக் கப்பலை விற்பதன் மூலம் சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவும் ஆசியப் பிராந்தியத்தில் ஆயுதம் விற்பனை செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.

3000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. 31 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும் பல முறை மேம்படுத்தப்பட்ட கப்பல் என்பதால் அதிக செயல்திறன் கொண்டது. கடைசியாக விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் தளத்தில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயக்கும் படகு இந்த நீர்மூழ்கிக் கப்பலோடு இணைக்கப்பட்டது.

வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மியான்மர் தனது கடற்படைக்கு இந்தக் கப்பலில் பயிற்சி அளிக்கத் தொடங்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதேபோல சிந்துகோஷ் என்ற மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியாவிடமிருந்து வாங்க மியான்மர் திட்டமிட்டுள்ளது.

வரும் மார்ச் – பிப்ரவரி மாதங்களில் இந்தியா – மியான்மர் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தீவுகளை வான்வழியே கண்காணிக்க உதவும் ரோந்து விமானம், துப்பாக்கி இணைக்கப்பட்ட கடற்படை படகுகள், 105 மிமீ சிறிய ரகத் துப்பாக்கி, மோர்ட்டார், கிரானைட் லாஞ்சர், ரைபிள் போன்றவற்றையும் இந்தியா மியான்மருக்கு விற்றிருக்கிறது.